இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: திருமாவளவன் மே 17, 2009
Posted by அருளடியான் in ஈழத் தமிழர், போர் நிறுத்தம், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப் புலிகள்.Tags: ஈழத் தமிழர், போர் நிறுத்தம், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப் புலிகள்
add a comment
இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்
”உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத் தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்?
அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும். எனவே புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் முயற்சி என்கிற நடவடிக்கைகளையும் கைவிட்டு இந்த அளவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் நாகரீகமுள்ள அரசியல் அணுகுமுறையாகும்.
எனவே இந்திய அரசும் அமெரிக்க அதிபரின் கருத்து வலுப்படுத்தும் வகையிலும் ஐ.நா பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை வழிமொழிகிற வகையிலும் இலங்கை அரசை எச்சரித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும்: விடுதலைப் புலிகள் மே 17, 2009
Posted by அருளடியான் in ஈழத் தமிழர், போர் நிறுத்தம், விடுதலைப் புலிகள்.Tags: ஈழத் தமிழர், போர் நிறுத்தம், விடுதலைப் புலிகள்
add a comment

கொழும்பு, மே 17- உடனடியாக போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்புத்துறையின் தலைவர் எஸ். பத்மநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் ஒரே நாளில் பொதுமக்களில் 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 25000 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவ உதவியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
முன்னேறி வரும் இலங்கை ராணுவத்தை எந்தவித உதவியுமின்றி எங்கள் மக்களின் ஆதரவுடன் எதிர்த்து போராடி வருகிறோம். குண்டுவீச்சிலும் பசியிலும் நோயிலும் எங்கள் மக்கள் உயிரிழப்பதை தடுக்க விரும்புகிறோம். அவர்களுக்காக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளத் தயாராக உள்ளோம்.
எங்கள் கொள்கைக்காக போராடுவதையோ புலிகளின் பயமற்றதன்மையையோ யாரும் சந்தேகித்துவிட முடியாது. மூன்று தலைமுறைகளாக இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடியுள்ளோம். தமிழ் மக்களை காப்பதற்காக ஆயுதம் வைத்துக்கொள்வது எங்கள் உரிமை ஆகும். எங்கள் மக்களுக்கு நீதி கிடைப்பதை எந்த படையும் தடுத்துவிட முடியாது.
இந்த நேரத்தில் உடனடி தேவை போர்நிறுத்தம் தான். அப்பாவி மக்கள் உயிரிழப்பதை காக்கும் பொருட்டு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விடுதலைப் புலிகள் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் மே 17, 2009
Posted by அருளடியான் in தேர்தல் 2009, தேர்தல் முடிவுகள்.Tags: தேர்தல் 2009, தேர்தல் முடிவுகள்
add a comment
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணிகளை அது ஆரம்பித்துள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களை காங்கிரஸ் கூட்டணி எட்டியிருக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
நன்றி: பிபிசி தமிழ் 
நன்றி: தினமணி
7 தொகுதிகளிலும் பா.ம.கவிற்கு படுதோல்வி மே 16, 2009
Posted by அருளடியான் in அ.இ.அ.தி.மு.க, தேர்தல் 2009, பாட்டாளி மக்கள் கட்சி.Tags: அ.இ.அ.தி.மு.க, தேர்தல் 2009, பாட்டாளி மக்கள் கட்சி
add a comment
கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்ற பாட்டாளி மக்கள் கட்சி இம்முறை படுதோல்வி அடைந்தது.
மத்தியில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இடம்பெற்று விட்டு, கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, அஇஅதிமுக கூட்டணிக்குத் தாவிய பாமக-விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்ட பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் அக்கட்சியினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பாமக போட்டியிட்ட தொகுதிகள் :
ஸ்ரீபெரும்புதூர் – ஏ.கே. மூர்த்தி
அரக்கோணம் – ஆர்.வேலு
கள்ளக்குறிச்சி – கோ. தன்ராஜ்
தர்மபுரி – ஆர். செந்தில்
திருவண்ணாமலை – ஜே. குரு
சிதம்பரம் – பொன்னுசாமி
புதுச்சேரி – பேராசிரியர் ராமதாஸ்.
இந்த 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
எழுத்தாளர் ஞாநி வேண்டுகோள்! மே 15, 2009
Posted by அருளடியான் in தேர்தல் 2009.Tags: தேர்தல் 2009
add a comment
எழுத்தாளர் ஞாநி வேண்டுகோள்!
மே 13 தேர்தல்: ஆயிரக்கணக்கானோர் 49 ஓ பதிவு செய்தனர். அனைவருக்கும் நன்றி. ஆயிரக்கணக்கானோர் 49 ஓ போடவிடாமல் வேண்டுமென்றே அரசு ஊழியர்களான தேர்தல் அதிகாரிகளால் அரசியல் சதியின் விளைவாக, தடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்குமொரு வேண்டுகோள். உங்கள் ஓட்டுச்சாவடியின் எண்ணையும் நீங்கள் தடுக்கப்பட்ட நேரத்தையும் தடுத்த அதிகாரியின் அடையாளத்தையும் குறிப்பிட்டு, திரு நரேஷ் குப்தா, தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை 600009 என்ற முகவரிக்கு உடனே புகார் அனுப்புங்கள். தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புண்டு.
நன்றி: எழுத்தாளர் ஞாநி இணையத் தளம்
அனைவரும் வாக்களியுங்கள்! – தேர்தல் ஆணையம் வேண்டுகோள் மே 13, 2009
Posted by அருளடியான் in தேர்தல் 2009.Tags: தேர்தல் 2009
add a comment
இல. கணேசனுக்கு எதிராக டிராஃபிக் ராமசாமி வழக்கு மே 13, 2009
Posted by அருளடியான் in தேர்தல் 2009.Tags: தேர்தல் 2009
1 comment so far
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: நடிகர் கமல்ஹாசன் வருத்தம் மே 13, 2009
Posted by அருளடியான் in தேர்தல் 2009.Tags: தேர்தல் 2009
add a comment
சென்னை, மே 13- நடிகர் கமல்ஹாசனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த கமல் வாக்களிப்பதற்காக நேற்று மாலை அவசரமாக சென்னை புறப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அறிந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
”நான் வாக்களிப்பது தடைபடுவது இதுவே முதல்முறை ஆகும். இதற்காக எனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு புறப்பட்டு வந்தேன். இதனால் எனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பு.
ஒவ்வொரு சாதாரண குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயகக் கடமை. ஆனால், எனது ஓட்டுரிமை பாதிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன். நான் சென்னை முகவரியில் தான் வருமான வரி செலுத்தி வருகிறேன். மின் கட்டணமும் இதே முகவரியில் தான் செலுத்துகிறேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் லஸ் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளயில் தான் வாக்களித்தேன். இந்நிலையில், எனது பெயர் எப்படி நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை” என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜேஷ் லக்கானி கூறுகையில், ”லஸ் சர்ச் சாலையில் உள்ள அவரது வீடு கிடங்காக பயன்படுத்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கமல் முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் உள்ளார். எனினும், 2 ஆண்டுகளுக்கு முன்னரே அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது. எங்களது ஆவணங்களின்படி அவர் சென்னையில் வசிக்கவில்லை.
கொடுக்கப்பட்ட முகவரியில் ஒருவர் வசிக்கவில்லை என்ற சூழ்நிலையில் இந்த விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறோம்” என்றார்.
நன்றி: தினமணி இணையத் தளம்
முஸ்லிம்களின் கூட்டமைப்பு மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவு மே 12, 2009
Posted by அருளடியான் in தேர்தல் 2009, மனிதநேய மக்கள் கட்சி.Tags: தேர்தல் 2009, மனிதநேய மக்கள் கட்சி
1 comment so far
ஜமாஅத்தின் தேர்தல் அறிக்கை – சமரசம் ஆசிரியவுரை மே 10, 2009
Posted by அருளடியான் in ஜமாஅத்தே இஸ்லாமி, தேர்தல் 2009, தேர்தல் அறிக்கை.Tags: ஜமாஅத்தே இஸ்லாமி, தேர்தல் 2009, தேர்தல் அறிக்கை
add a comment














